இலங்கையில் தட்டுப்பட்டில் உள்ள மருத்துவ முக கவசங்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அமைந்துள்ள மருந்தகங்கள் தற்போரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன.
இந்த நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவித்த அரச மருந்தகங்கள் கூட்டுத் தாபனத்தின் நிர்வாக இயக்குனர் லலித் ஜயகொடி கூறுகையில்,
மருத்துவ முகக் கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன, இருப்பினும், சீனாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததன் காரணமாக இந்த இறக்குமதி நிறுத்தப்பட்டது.
எமது நாடு மாத்திரமன்றி சீனாவில் கூட தற்போது மருத்துவ முகங்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. காரணம் மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் முக்கிய தொழிற்சாலைகள் ஹூபே மாகாணத்தில் அமைந்துள்ளன
இது கொரோனா வைரஸ் பரவலின் மையமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

