சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!

304 0

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க, முன்னர் செயற்பட்டிருந்தார்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக சாட்சியமளிக்க ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

லலித் பத்திநாயக்க இதற்கு முன்னரும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்ததுடன், ஆணைக்குழுவில் இது வரையில் 72 பேர் சாட்சியமளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.