அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (26) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதில் கலந்துக் கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக அந்த பேச்சாளர் அததெரணவுக்கு தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்து கலந்துரையாடுவது இந்த சந்திப்பின் நோக்கம் என ஆணைக்குழுவின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று முற்பகல் 9.30 க்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

