யாழ்.மாவட்ட அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல்…!

324 0

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேச அபிவிருத்தி மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (25) இடம்பெறுகிறது.

சங்கானை – வலிகாமம் மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (25) காலை இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுகிறது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெறும் இந்தக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகள் கலந்துகொள்கின்றன.

குறித்த கலந்துரையாடலில் வலிகாமம் மேற்கு பிரதேசம், வலிகாமம் தென் மேற்கு பிரதேசம் மற்றும் காரைநகர் பிரதேசம் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளின் அபிவிருத்தித் திட்டங்கள், தேவைப்பாடுகள், பிரச்சினைகள் மற்றும் பொது விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

இதேவேளை, இன்று பிற்பகல் 2 மணிக்கு வலிகாமம் தெற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அந்தப் பகுதியின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர், வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலாளர் ஆகியோரினால் பிரதேச ரீதியான திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது