அடையாள அட்டை தயாரித்த இருவர் கைது

373 0

போலி அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆட்பதிவுத் திணைக்கள வளாகத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லம்பிட்டி மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் வசிக்கும் சந்தேகநபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை, கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.