ஸார்ப் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளை பார்வையிட்ட ஜப்பானிய தூதரக பிரதிநிதிகள்!

329 0

வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனத்திற்கு இலங்கைக்கான ஜப்பானிய தூதரக பிரதிநிதி இற்றோ பியுமி, ஜனனி கந்தையா ஆகியோர் விஜயம் செய்தனர்.

இதன் போது அவர்கள் ஸார்ப் நிறுவன அலுவலகம் மற்றும் முகமாலை கண்ணிவெடியகற்றும் தளம் ; மற்றும் மாங்குளம் கண்ணிவெடியகற்றும் தளம், மாங்குளம் பிரதேசதளம் என்பவற்றை பார்வையிட்டனர்.

இதன் போது கண்ணிவெடியகற்றப்பட்டு கையளிக்கப்பட்ட பிரதேசங்கள் தற்போது வேலை நடைபெறும் ; பிரதேசங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள்; தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

முகமாலைப் பகுதியில் கண்ணிவெடியகற்றலில் ஈடுபடும் ஸார்ப் நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2020 பெப்ரவரி; மாதம்; 15ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் ஒன்பது இலட்சத்து எண்பத்தெட்டாயிரத்து எண்நூற்று முப்பத்தைந்து சதுரமீற்றர் பரப்பளவில் (988,83SQR) இருந்து இருபத்தொராயிரத்து நானூற்று இருபத்தெட்டு;(21,428)  அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

தற்போது நான்கு அணிகள்; கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.