மருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து!

192 0

மொரட்டுவையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று(திங்கட்கிழமை) காலை 7.50 மணியளவில் மொரட்டுவையில் இருந்து பயணித்த 325 ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

துரிதமாக செயற்பட்டமையினால் ஆபத்தின்றி பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த அனர்த்தம் காரணமாக கடலோர ரயில் மார்க்கத்தில் ரயில் பயணங்களுக்கு தாமதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.