பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை – அரசாங்கம் நடவடிக்கை!

220 0

நாட்டை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து மீட்க அரசாங்கம் ஒரு வெற்றிகரமான திட்டத்தை தொடங்கியுள்ளது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், போதைப்பொருள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என கூறினார்.

மேலும் பாடசாலை மாணவர்களிடையேயும் போதைப்பொருள் பாவனை இருப்பதாகவும் இது தொடர்பாக உடனடியாக விசாரணைகள் இடம்பெறும் என்றும் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

அதன்படி போதைப்பொருள் அச்சுறுத்தலை சமாளிப்பதற்கான முதல் படியாக பொலிஸ் அதிகாரிகளின் செயல்திறனை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

அத்தோடு அவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.