நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் பலி

266 0

பத்தரமுல்லை – மாலபே வீதியின் தலாஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (08) 11.40 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் வாகன சாரதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த நபர் முல்லேரியாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ராகலை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபரொருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய சாரதியை கைது செய்வதற்காக தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.