இரணைமடுவில் முதலைக் கடிக்கு இலக்கான மீனவர்

287 0

 

கிளிநொச்சி- இரணைமடு குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரை முதலை கடித்த நிலையில் படுகாயமடைந்த மீனவா் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் கிளிநொச்சியை சேர்ந்த அருணாச்சலம் – பரமேஸ்வரன் , வயது -31 என்பவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரணைமடுக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சமயம் வலையினை வலித்துள்ளார். இதன்போது முதலை வலையில் அகப்பட்டுள்ளது.

இதனால் வலையில் அகப்பட்ட முதலையினை விடுவித்து வலையை மீட்க முயன்றுள்ளார். முயன்ற சமயம் முதலை திடீரென குறித்த மீனவன் மீது பாய்ந்து இடது கையை இதனால் மீனவன் குளத்தில் வீழ்ந்துள்ளார். இருப்பினும் ஒருவாராக முதலையிடம் இருந்து விடுபட்டு கரை சேர்ந்து மாவட்ட வைத்தியசாலைநில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.