விபத்தில் 74 வயதான பெண் பலி – 21 வயது இளைஞன் படுகாயம்

236 0

யாழ். கொடிகாமம் – நெல்லியடி வீதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற விபத்தில் 74 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்தில் 21 வயதான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பிற்பகல் 1.55 மணி அளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் துன்னாலையை சேர்ந்த 74 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அதிகமான வேகமே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.