இராக் பிரதமர் முகமது அல்லாவி: அதிபர் நடவடிக்கைக்கு பிறகும் தொடரும் போராட்டம்

224 0

இராக்கில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், புதிய பிரதமராக முகமது அல்லாவியை நியமித்து அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் அவரை ஏற்க மறுத்து போராட்டம் தொடர்கிறது.

இராக்கின் அதிபராக பர்ஹம் சலேவும் பிரதமராக அடல் அப்துல் மஹ்தியும் பதவி வகித்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. வேலையின்மை, ஊழல், பொது சேவைகளில் குறைபாடு உள்ளிட்ட காரணங்களைக் கூறி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இராக் நிர்வாகத்தில் ஈரான் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கை. போராட்டக்காரர்களை ஒடுக்க அந்நாட்டு அரசு கண்ணீர் புகை குண்டுகள், துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பான மோதல் சம்பவங்களில் 480 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் போராட்டம் காரணமாக அப்துல் மஹ்தி கடந்த மாதம் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.