அண்ணா நினைவுநாள்- மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப்பேரணி

231 0

பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளான இன்று சென்னையில் திமுக சார்பில் அமைதிப்பேரணி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டு கொலு வீற்றிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த அமைதிப்பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை நடைபெறுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் பேரணியில் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதனையடுத்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.