கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

307 0
மன்னார் இரானமாதா நகர் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையில் கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவரை பொலிஸார் மற்றும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையைச் சுற்றியுள்ள கடலின் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன் படி 2020 ஜனவரி 31 ஆம் திகதி கடற்படையினர் முலங்காவில் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து மன்னார் இரானமாதா பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த சுமார் 05 கிலோ 250 கிராம் கடலாமை இறைச்சியுடன் சந்தேநகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதான நீர்கொழும்பு பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடலாமை இறைச்சி மற்றும் சந்தேகநபர் மீது மேலதிக விசாரணைகள் முலங்காவில் பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகிறது.