நல்ல திட்டங்கள் இருந்தால் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவோம் – காவிந்த

379 0

கட்சி வேறுபாடுகளின்றி அடுத்த பொதுத் தேர்தலில் சரியான பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுப்பது என்பது மக்களின் பொறுப்பு என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறுகிறார்.

கம்பஹாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தற்போதைய அரசாங்கமும் 2015 க்கு முன்னர் இருந்த அரசாங்கமும் கட்சியைப் பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கையில் நாட்டுக்கும் மக்களுக்கும் நலன்தரும் விடயங்கள் இருந்தால் அவற்றிற்கு ஆதரவை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

மேலும் கட்சி வேறுபாடுகளை விடுத்து, திருடர்கள், கொள்ளையர்கள் இல்லாத பொதுப் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் என்றும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்மூலம் சிறந்த நாடாளுமன்றத்தை உருவாக்க முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.