வவுனியா- ஏ9 வீதியை அண்டிய பகுதியில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கை

245 0

வவுனியா புளியங்குளம், ஓமந்தை‌ மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவமும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.சந்தேகத்திற்கிடமாக வீதியால் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்ததுடன், மோப்ப நாயின் மூலமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாடுமுழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் முகமாக ஜனாதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கூறியதனையடுத்து, பொதிகளுடன் வருபவர்களிடமும் சந்தேகத்திற்கிடமான பேருந்துகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் வவுனியா- ஏ9 வீதியில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.