ஜெர்மனியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – 6 பேர் பலி

253 0

ஜெர்மனியில் குடியிருப்பில் நுழைந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது ரோட் ஆம் சீ நகரம். இந்த நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மர்ம நபர் ஒருவர் இன்று மதியம் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.