சிறுவனின் பையில் 5 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம்!

220 0
சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பாளங்கள் மற்றும் தங்க நகை தொகையொன்றுடன் சிறுவன் ஒருவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் இவர்கள் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் கொழும்பு தெமடகொடை மற்றும் கிரேன்பாஸ் பிரதேசங்களை சேர்ந்த 28 வயதுடைய இரண்டு இளைஞர்களும் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று அதிகாலை விமான நிலைய பிரவேச பத்திரங்கள் மூன்றினை பெற்று, விமான நிலையத்தினுள் பிரவேசித்து, வௌிநாட்டில் இருந்து வந்த நபரொருவரிடம் குறித்த தங்க பாளங்கள் மற்றும் தங்க நகை தொகையினை பெற்று மீண்டு விமான நிலையத்தில் இருந்து வௌியேற முற்பட்ட போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 15 வயதுடைய சிறுவனிடம் இருந்த பொதியில் 05 கிலோ 500 கிராம் எடையுடைய குறித்த தங்க பாளங்கள் மற்றும் தங்க நகை தொகை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.