தங்கத்தை தேடி முல்லைத்தீவில் அகழ்வு

239 0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸாரால் அகழ்வு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. எனினும் இதன்போது எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை.

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்துக்குப் பின்புறமாக இந்த அகழ்வுப் பணிகள் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.

இறுதி யுத்தத்தின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடியே இவ்வாறு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மிக நீண்ட நேரமாக அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதிலும் எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.