மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அஜித் பிரசன்னவிற்கு அழைப்பு

219 0
ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவை நாளை (24) நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

முன்னாள் நீதவான் திலிண கமகேவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கு ஒன்று தொடர்பில் கடந்த தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்ததன் ஊடாக நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவருக்கு இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் கலுஆராய்ச்சியால் இந்த அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.