வெளியேற முற்பட்ட வெளிநாட்டு கப்பல் தடுக்கப்பட்டுள்ளது.

455 0

1467335729_8558126_hirunews_Shipகொழும்பில் இருந்து அனுமதியின்றி வெளியேற முயற்சித்த வெளிநாட்டு கப்பல் ஒன்றை கடற்படையினர் காலி கடற்பரப்பில் வைத்து தடுத்துள்ளனர்.

கடற்படை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்கம் விடுத்த கோரிக்கை அடிப்படையில் இந்த கப்பல் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து வந்ததாக கூறப்படும் குறித்த கப்பல் தொடர்பில் சுங்க திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் உரிய ஆவணங்கள் எவையும் தீர்க்கப்படாத நிலையில், குறித்த கப்பல் கொழும்பில் இருந்து வெளியேற முயற்சித்த வேளையில் தடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment