இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

235 0
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி கணிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி செயலகத்தால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின ஆணையாளர் நாயகமாக செயற்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன குறித்த பதவியில் இருந்து விலகியுள்ளதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.