ரஞ்சன் இதுவரை எந்த ஒரு இறுவட்டையும் சமர்ப்பிக்கவில்லை- ஆனந்த குமாரசிறி

266 0
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக ஹர்ச டி சில்வா இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்த போதே பிரதி சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, சுண்டிக்குளம், ஆதமின்பாலம், நெடுந்தீவு உட்பட பல பகுதிகள் தேசிய சரணாலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.