மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

336 0

பொத்துவில், ரொட்டேவௌ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த குளத்தில் இருவர் மீன்பிடித்த கொண்டிருந்த நிலையில் இருவரும் நீரில் முழ்கியுள்ளனர்.இதனை அடுத்து இருவரையும் காப்பாற்றி பொத்துவில் வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.இதன்போதே இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.30 வயதுடைய பொத்துவில் பகுதியில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.