கைவிடப்பட்டிருந்த இரண்டு கைக்குண்டுகள் செயலிழக்க வைப்பு

323 0
பொல்பித்திகம, இதகொல்ல பகுதியில் கைவிடப்பட்டிருந்த இரண்டு கைக்குண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (13) குறித்த கைக்குண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொல்பித்திகம பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைய இலங்கை இராணுவத்தினரால் குறித்த கைக்குண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைக்குண்டுகள் தொடர்பில் பொல்பித்திகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.