நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் மோதி ஒருவர் பலி

206 0

சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் பத்துளுஓய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (13) இரவு 10.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.

முந்தலம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய தாரக மாரசிங்க எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.