கழிவுப் பொருள் கொள்கலன் – இரசாயன பரிசோதகருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு

219 0

இங்கிலாந்தில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு தற்பொழுது கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வலயத்தில் வைக்கப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை கொண்ட கொள்கலன் தொடர்பில் நீதிமன்ற உத்தரவை தட்டிக்கழித்தமைக்காக இரசாயன பரிசோதகருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேன்முறையிட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (13) நீதி அமைச்சு மற்றும் அமைச்சின் செயலாளருக்கும் சட்டமா அதிபருக்கும் இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த கொள்கலன் தொடர்பில் இரசாயன அறிக்கை ஒன்றை வழங்குமாறு இதற்கு முன்னர் 3 சந்தர்ப்பங்களில் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் அதற்கு ஏற்ப செயற்படாமையே இதற்கு காரணமாகும்.

இதேவேளை இந்த கழிவுப்பொருள் கொள்கலன் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அடுத்து வரும் தினத்தில் நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் சுங்க பணிப்பாளர் நாயகத்துக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.