ரீ – 56 ரக துப்பாக்கி, மகஸின், தோட்டாக்கள் என்பவற்றுடன் இரு இளைஞர்கள் கைது!

183 0

விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றையடுத்து ரீ- 56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தக் கூடிய தோட்டாக்கள், மகஸின் என்பனவற்றோடு இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனுமிடத்திலிருந்து அதே பொலிஸ் நிருவாகப் பிரிவில் உள்ளடங்கும் வாழைச்சேனை கறுவாக்கேணி பகுதிக்கு இந்த துப்பாகியையும் தோட்டாக்களையும் எடுத்துச் செல்லும்போது வழிமறித்த விஷேட அதிரடிப்படையினர் ஆயுதத்தையும் கைப்பற்றியதுாடு இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை பகல் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் வாழைச்சேனை 2ஆம் குறுக்கு விநாயகபுரம் கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்ட ; குமாரப்போடி தனுஜன் (வயது 23) இராசமாணிக்கம் மகேந்திரன் (வயது 33) ஆகியோரே விஷேட அதிரடிப்படையினரால் ; கைது செய்யப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது