நாளாந்த மின்சார நுகர்வு அதிகரிப்பு!

269 0

நாட்டில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது நாளாந்த மின்சார நுகர்வு அதிகரித்துள்ளது.மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

மழையுடனான காலநிலை காரணமாகவே நாளாந்த மின்சார நுகர்வு அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.இதன்காரணமாக மின்சாரத்தினை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.