முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கை!

256 0

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்துவைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று(09.01.2020) அகழ்வு ; நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் எதுவித பொருட்களும்  மீட்க்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள குடும்ப நல உத்தியோகத்தர் அலுவலகம் அமைந்துள்ள வாளாகத்திற்குள் தோண்டும் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு பொலிசார், சிறப்பு அதிரடிப்படையினர், நீதிமன்ற உத்தியோகத்தர், பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள்,தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், படையினர் முன்னிலையில் இந்த அகழ்வு பணிகள் காலை முன்னெடுக்கப்பட்ட போதும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அகழ்வு பணிகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.