தமிழ் – முஸ்லிம் மக்களை புறக்கணித்து தனி பௌத்த இராஜ்ஜியத்தை தோற்றுவிக்கும் விதத்தில் தேர்தல் சட்டம் திருத்தியமைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள். எந்த இன மக்களையும்ஓரங்கட்டி செயற்பட வேண்டும் என்பது ஜனாதிபயின் நோக்கமல்ல என கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற பத்திரியை ஆசிரியர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

