சர்ச்சைக்குரிய ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து CCD விசாரணை!

196 0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் குறித்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய இந்த விடயம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க வெவ்வேறு நபர்களுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் குறித்த குரல் பதிவுகள் ஊடகங்களில் வௌியாகியதைத் தொடர்ந்து பொலிஸ், நீதிமன்ற சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டமைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதன்போது குற்றப்புலனாய்வு திணைக்களம், நிதிக் குற்றப் பிரிவு மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணைகளுக்கு தேவையானது என சந்தேகிக்கப்படும் பல இறுவட்டுக்கள் அவரின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டன.

இதனையடுத்து முன்னைய ஆட்சியின்போது குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான குரல் பதிவுகள் அனைத்தும் பகிரங்கமாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.