தேர்தல் முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை – மஹிந்த

218 0

ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது இடம்­பெற்ற முறை­கே­டுகள் தொடர்பில் தெரி­விக்­கப்­பட்ட முறைப்பாடுகள் குறித்து இது­வ­ரையில் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதன் காரண மாக,  எதிர்­வ­ரக்­கூ­டிய தேர்­தல்­களின் போது பல்­வேறு  சவால்­க­ளுக்­கு ­முகம்கொடுக்க வேண்­டிய நிலை ஏற்­படும் என ­தேர்­தல்கள் ஆணைக்­குழுத் தலைவர் மஹிந்த தேசப்­ பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின்போது சில கட்­சி­களின் செயற்­பா­டுகள் குறித்தும், அரச வளங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டமை தொடர்­பிலும் பல முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தன.  இவை குறித்து உரிய நட­வ­டிக்­கை­களை  எடுக்­கு­மாறு பொது நிர்­வாக அமைச்­சுக்கும், அரச சேவை ஆணைக்­கு­ழு­வுக்கும் அழுத்தம் கொடுக்­கப்­பட்ட  போதிலும் அது குறித்து இது­வ­ரையில் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­களும்  எடுக்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

அத்­துடன், சில அரச ஊட­கங்கள் தேர்தல் விதி­மு­றை­களை மீறி பக்கச் சார்­பாக செயற்­பட்­டமை தொடர்­பி­லான  முறைப்­பா­டு­களை பொலி­ஸா­ருக்கும், அரச சேவை ஆணைக்­கு­ழு­வுக்கும் செய்தபோதிலும்  போதிலும், அது குறித்தும் இது­வ­ரையில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டவில் லை.    குறிப்­பாக சில இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் அறி­வு­றுத்­தல்­களைக்கூட கருத்தில் கொள்ளத் தவறியிருந்தன. ஆனால் இத்தகைய எவ்வித முறைப்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை எதிர்வரும் தேர்தல்களில் தாக்கம் செலுத்தக்கூடும்  என்றார்.