பேர்பேக்சுவெல் குழுமம் – தேசிய சேமிப்பு வங்கி தொடர்பு

271 0

imagesமத்திய வங்கியின் முறிவிற்பனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேர்பேக்சுவெல் குழுமத்துக்கு, தேசிய சேமிப்பு வங்கியில் 7 வீத பங்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அதனை 10வீதமாக அதிகரிக்க அந்த குழுமம் நோக்கம் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே குறித்த குழுமம், தேசிய சேமிப்பு வங்கியில் 2 பில்லியன் ரூபாய்களை முதலீடு செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி முதல் இந்த குழுமம், தேசிய சேமிப்பு வங்கியின் பங்குகளை கொள்வனவு செய்ய ஆரம்பித்தது.

இதேவேளை பேர்பேக்சுவெல் குழுமத்தின் இந்த வருட மார்ச் மாத இறுதிவரையிலான இலாபம் 5.1பில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது கடந்த வருடத்தைக்காட்டிலும் 430வீத அதிகரிப்பாகும்.

எனினும் இந்த இலாபத்தில் மத்திய வங்கியின் முறிமூலமாக கிடைத்ததாக கூறப்படும் 5 பில்லியன் ரூபாய்கள் உள்ளடங்கவில்லை.