இலங்கையில் சித்திரவதைகள் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

264 0

human-rights-commissionஇலங்கையில் சித்திரவதைகள் மற்றும் முறையற்ற கொடுமையான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு எதிராக, சட்டமா அதிபரும் பொலிஸ் மா அதிபரும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சித்திரவதைகளுக்கு எதிரான தமது ஐந்தாவது மீளாய்வு அறிக்கையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் தமது ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தபோதும் எவ்வித முன்னேற்ற அறிக்கைகளையும் பொலிஸ் மா அதிபர் தரவில்லை.

இந்தநிலையில் சட்டமா அதிபர் திணைக்களமும் சித்திரவதைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் குறித்த அறிக்கையை தமது ஆணைக்குழுவுக்கு வழங்கவில்லை என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தமக்கு கிடைத்த தகவல்களின்படி கடந்த மே மாதம் வரையில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாத 29பேர் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சில வழக்குகள் 15 வருடங்களாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன
இந்தநிலையில் நீதித்துறையில் தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்களின் வெற்றிடம் மற்றும் காவல்துறை நிலையங்களில் ஏற்பட்டுள்ள தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்களின் வெற்றிடங்கள் என்பன சட்ட ஏற்பாடுகளை பாதித்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தடுப்பில் இருந்து மரணமானவர்கள் பலர் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமது மீளாய்வு அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது.