ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள உள் முரண்­பாட்டு நிலைக்கு  தீர்வு காண்­ப­தற்கு தொடர் பேச்­சு­வார்த்­தை­களில்  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்சி தலை­வர்கள் மும்­மு­ர­மாக ஈட்­டு­பட்டு வரு­கின்­றனர்.

ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாச ஆகி­யோரை சந்­தித்து இவர்கள் நேற்று விரி­வான பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர்.

 

இந்த சந்­திப்பில் ஐக்­கிய தேசிய முன்­னி­ணியின் பங்­கா­ளிக்­கட்சித் தலை­வர்­க­ளான மனோ கணேசன் ரவூப் ஹக்கீம் சம்­பிக்க ரண­வக்க ஆகி­யோரும் ஐ.தே.க.எம்.பி.க்களான ரவி­க­ரு­ணா­நா­யக்க தலதா அத்­து­கொ­றல ரஞ்சித் மத்­தும பண்­டார உட்­பட வேறு­சி­லரும் கலந்­து­கொண்­டனர்.

இதன்­போது கட்­சியின் தலை­மைப்­ப­தவி தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­துடன் பொதுத் தேர்­தலை எவ்­வாறு சந்­திப்­பது என்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

கட்சி தலை­மைப்­ப­த­வியை துறந்து சிரேஷ்ட தலை­வ­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நிய­மிப்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் பிர­தமர் வேட்­பா­ள­ராக கரு­ஜெ­ய­சூ­ரி­யவை நிய­மிப்­பது  குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

கட்­சியின் தலை­மைப்­ப­த­வியை சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வழங்கி பொதுத் தேர்­தலில் பிர­தமர் வேட்பாளராக கருஜயசூரியவை களமிறக்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டது. இந்த விடயங்கள் தொடர்பில் இன்றைய தினமும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளதாக இன்றைய பாராளுமன்ற அமர்வில் சபாநாயகர் கருஜயசூரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.