2020 ஆண்டின் முதலாம் தவணை நாளை ஆரம்பம்

210 0
2020 ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை (02) ஆரம்பமாகவுள்ளது.

2019 ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையின் விடை தாள் திருத்தும் பணிகளின் முதல் கட்டம் கடந்த 26 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையில் இடம்பெற்று வருகின்றது.

அதனடிப்படையில் முதல் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் 56 நகரங்களில் உள்ள 84 பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 110 நிலையங்களில் இடம்பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் 47 பாடசாலைகள் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஏனைய 37 பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.