அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் நபர்களை கண்டறிய இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
27 ஆம் திகதி வெளியான வர்த்தமானியூடாக சீமெந்து 50 கிலோகிராம் சீமெந்து பக்கெற்றுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அதிக விலையில் அரிசி விற்பனையில் ஈடுபட்ட 860 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

