கரு ஜய­சூ­ரி­யவை தேர்­தலில் மக்கள் புறக்­க­ணிப்­பார்கள் – காமினி லொகுகே

285 0

ஐக்­கிய தேசிய கட்­சிக்கு ஆத­ர­வாக  செயற்­படும்  சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவை    மக்கள் பொதுத்­தேர்­தலின் ஊடாக  புறக்­க­ணிப்­பார்கள். கடந்த அர­சாங்­கத்தில்  எதி­ர­ணிக்கு    எதி­ராக  முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற்­பா­டு­களின் போது  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரது சிறப்­பு­ரிமை மீறப்­பட்­டமை தொடர்பில்  சபா­நா­யகர்  எவ்­வித    நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை என  கிரா­மிய அபி­வி­ருத்தி அமைச்சர்  காமினி லொகுகே தெரி­வித்தார்.

பொது­ஜன  பெர­மு­னவின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று   திங்­கட்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில்  கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர்  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்,

பாரா­ளு­மன்­றத்தின் அனைத்து அதி­கா­ரங்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் உரி­மை­களும்,  பாது­காப்பும்  சபா­நா­ய­கரின் வசமே காணப்­படும். ஆளும் மற்றும் எதிர்த் தரப்­பி­ன­ருக்கு   சார்­பா­கவும். எதி­ரா­கவும் செயற்­ப­டாமல் சபா­நா­யகர் பத­விக்கு  ஏற்ற வகையில் நடு­நி­லை­யாக செயற்­பட வேண்டும். ஆனால் 2015ஆம் ஆண்­டுக்கு பிறகு   சபா­நா­யகர் முழு­மை­யாக ஒரு கட்­சிக்கு   மாத்­திரம் ஆத­ர­வா­கவே  செயற்­ப­டு­கின்றார். அதனை அவர்  பல சம்­ப­வங்­களின் ஊடாக நிரூ­பித்து காட்­டி­யுள்ளார்.

ஜனா­தி­பதி தேர்­தலில் முழு­மை­யாக மக்­களின் அர­சியல் தீர்­மானம் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது.  தற்­போது  இடைக்­கால அர­சாங்கம் ஆட்­சியில் உள்ள நிலையில்  சபா­நா­யகர் இன்று  ஐக்­கிய தேசிய கட்­சிக்கு மாத்­திரம் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­கின்றார். இவ­ரது ஒரு­த­லைப்­பட்­ச­மான   செயற்­பா­டு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு  பொதுத்­தேர்­தலில் இவ­ரையும் மக்கள்  அர­சி­யலில் இருந்து புறக்­க­ணிப்­பார்கள்.

மத்­திய வங்­கியின் பினை­முறி மோசடி   குறித்து ஆராயும் ஜனா­தி­பதி விசா­ரணை  ஆணைக்­குழு   2015ஆம் ஆண்டு தொடக்கம் 2018.12.31ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் அர­சாங்­கத்­தினால் இடம் பெற்­ற­தாக குறிப்­பி­டப்­படும் நிதி மற்றும் ஏனைய  அரச வள மோசடி தொடர்பில் ஆராயும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு மற்றும்    ஏப்ரல் 21தின குண்­டுத்­தாக்­குதல் குறித்து ஆராயும் விசா­ரணை ஆணைக்­கு­ழுவை  முன்னாள் ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன    நிய­மித்தார்.

ஆட்­சி­மாற்­றத்தை தொடர்ந்து ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின்  செயற்­பா­டு­களும் இடை­நி­றுத்­தப்­ப­ட­வில்லை, விசா­ரணை   நட­வ­டிக்­கை­க­ளுக்கு அர­சியல் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­ப­ட­வு­மில்லை.  அனைத்து ஆணைக்­கு­ழுவின் செயற்­ப­டு­கா­லமும் நீடிக்­க­ப்பட்டு  விசா­ரணைகள்  முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.  சுயா­தீன விசா­ர­ணை­களின் ஊடாக    பலர் கைது செய்­யப்­ப­டலாம். இதனை அர­சியல் பழி­வாங்கல் என்று குறிப்­பி­டு­வது    எதிர்த் தரப்பின் பல­வீ­ன­மா­கவே  கருத முடியும்.

அர­சியல் பழி­வாங்­கலை இல­கு­வான   முறையில் முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு கடந்த அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­க­ப்­பட்ட      சிறப்பு நீதி­மன்றம்,  நிதி குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு ஆகி­யவை குறித்து அர­சாங்கம் உரிய  கவனம் செலுத்தும். குற்­றங்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு  பிரத்­தி­யே­க­மாக ஒரு தாப­னத்தை தோற்­று­விக்க வேண்­டிய தேவை கிடை­யாது.

பொரு­ளா­தார ரீதியில் பாதிக்­கப்­பட் ­டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங் குவது தொடர்பில் அரசாங்கம்  உரிய  நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தி யாவசிய பொருட்களின் விலையேற்றத்தி ற்கு  பல்வேறு  காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. எவ்வாறு இருப்பினும் ஜனவரி மாதம் தொடக்கம்   அத்தியாவ சிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைவடையும்.