வாக்குறுதிக்கு அமைய நடவடிக்கை எடுங்கள்-மனோ

245 0

ஜனாதிபதி தேர்தல் காலத்திற்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பிரிவினரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

கேகாலை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பிணைமுறி மோசடி தொடர்பிலும் MCC ஒப்பந்தம் தொடர்பிலும் கதைத்தாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று அந்த விடயங்கள் தொடர்பில் எந்தவொரு கதையும் இல்லை எனுவும் அவர் ​தெரிவித்துள்ளார்.

பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பிரிவினரை உடனடியாக கைது செய்யமாறு தெரிவித்த அவர், சிங்கபூரிற்கு சென்று அர்ஜுன் மஹேந்திரனை அழைத்து வருமாறும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கூறிய எந்தவொரு நடவடிக்கையையும் செய்யாமல் இன்று சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்னவின் பின்னால் ஓடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.