சீருடை வவுச்சர், பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை 3 ஆம் திகதியுடன் நிறைவு!

176 0

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் மற்றும் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படவுள்ளன.

அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வலய மட்டத்தில் தற்போது பாடப்புத்தங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.