ட்ரம்­பிற்கு 2020 இல் மூளையில் கட்டி ஏற்­பட்டு உயி­ருக்­காகப் போராடும் நிலை ஏற்­படும்: கண்­பார்­வை­யற்ற தீர்க்­க­த­ரி­சி­யின் எதிர்­வு­கூறல்

409 0

எதிர்­வரும் 2020ஆம் ஆண்டில்   அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட ட்ரம்ப் செவிட்டுத் தன்மை மற்றும் உயி­ரா­பத்­தான நோய் என்­ப­னவற்றால் துன்­பப்­படும் அதே­ச­மயம்  ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டி­னுக்கு ஒரு படு­கொலை முயற்­சியை தடுக்க வேண்­டி­யி­ருக்கும் என எதிர்­காலம் குறித்து கணித்துக் கூறு­வதில் வல்­ல­மையைக் கொண்ட பல்­கே­ரி­யாவைச் சேர்ந்த கண்­பார்­வை­யற்ற  தீர்க்­க­த­ரி­சி­யான பாபா வக்னா  எதிர்­வு­கூறி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அமெ­ரிக்க இரட்டைக் கோபு­ரங்கள் மீது நடத்­தப்­பட்ட  செப்­டெம்பர் 11 ஆம் திகதி தாக்­கு­தலை சரி­யாக கணித்துக் கூறி­ய­வ­ராக கரு­தப்­படும் பாபா வக்னா, ஐரோப்­பா­வா­னது எதிர்­வரும் ஆண்டில்  முஸ்லிம் தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்­தான இர­சா­யனத் தாக்­கு­த­லொன்றை எதிர்­கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்­டி­யுள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்ளார்.

கண்­பார்­வை­யற்ற பாபா வக்னா 1996 ஆம் ஆண்டு தனது 85 ஆவது வயதில் மர­ண­மா­கி­யி­ருந்த போதும் அவரால்  எதிர்­வரும் 5079 ஆம் ஆண்டுவரை  நிகழ­வுள்ள முக்­கிய சம்­ப­வங்கள் குறித்து எதிர்­வு­கூ­றப்­பட்­டுள்­ள­தாக  கூறப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் அவரால் எதிர்­வரும் வருடம் தொடர்பில் எதிர்­வு­கூ­றப்­பட்­ட­வைகள் அமெ­ரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்­பா­வுக்கு கவலை தரு­வ­ன­வாக உள்­ளன.

2020ஆம் ஆண்டில் ட்ரம்பின் மூளையில் கட்டி ஏற்­பட்டு அவ­ரது காது செவி­டா­வ­துடன் அவர் அந்த நோய்ப் பாதிப்பால் இறக்க நேரி­டலாம் என  பாபா வக்னா எதிர்­வு­ கூ­றி­யுள்­ள­தாக அவ­ரது எதிர்­வு­கூ­றல்­களை பர­ிசீ­ல­னைக்­குட்­ப­டுத்­தி­ய­வர்கள் கூறு­கின்­றனர்.

அத்­துடன்  எதிர்­வரும் ஆண்டில் முஸ்லிம் தீவி­ர­வாத படை­யொன்று இர­சா­யன ஆயு­தத்­துடன் ஐரோப்­பா­வுக்குள் ஊடு­ருவும் என  பாபா வக்னா எதிர்­வு ­கூ­றி­யுள்ளார்.

அதேசமயம் விளா­டிமிர் புட்­டினை ரஷ்­யாவில் வைத்துப் படு­கொலை செய்­வ­தற்கு    முயற்­சி­யொன்று மேற்­கொள்­ளப்­படும் எனத் தெரி­வித்­துள்ள பாபா வக்னா, அந்தப் படு­கொலை முயற்­சியில் புட்டின் உயிர் பிழைப்­பாரா இல்­லையா என்­பது தொடர்பில் எத­னையும் குறிப்­பிட்டுக் கூற­வில்லை.

ஆனால் இந்த 2019ஆம் ஆண்டு தொடர்பில் கடந்த ஆண்டில்  எதிர்வு கூறப்­பட்­ட­வையும் மேற்­படி எதிர்­வு­கூ­றலை ஒத்­த­ன­வா­க­வுள்ள நிலையில் அவ்­வா­றான அசம்­பா­வி­தங்கள் எதுவும்  இந்த ஆண்டில் இடம்­பெ­ற­வில்லை என்­பது டொனால்ட் ட்ரம்­பிற்கும் புட்­டி­னுக்கும் ஆறு­த­ல­ளிப்­ப­தாக உள்­ள­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பாபா வக்னா தனது 12 ஆவது வயதில் பாரிய புயல் தாக்­க­மொன்றின்போது மர்­ம­மான முறையில் தன் கண் பார்­வையை இழந்­தி­ருந்தார்.  புயலில் சிக்கி காணா­மல்­போன அவரை பல நாட்கள் கழித்து அழுக்கால் கண்கள் மூடப்­பட்டு மர­ணத்தின் விளிம்பில் இருந்த நிலையில்  அவ­ரது குடும்­பத்­தினர் கண்­டு­பி­டித்து மீட்­டனர். அதன் பின்­னரே அவ­ருக்கு எதிர்­காலம் தொடர்பில் எதிர்வு கூறும் ஆற்­றலும் மற்­ற­வர்­களைக் குணப்­ப­டுத்தும் வல்­ல­மையும் கிடைக்­கப்­பெற்­ற­தாக கூறப்­ப­டு­கி­றது.

2028ஆம் ஆண்­டுக்குள் உலகம் பட்­டி­னியால் முடி­வுக்கு வரும், 2256 ஆம் ஆண்­டுக்குள்  செவ்­வாய்க்­கி­ர­கத்­தி­லான கால­னித்­துவ குடி­யேற்­றங்கள் அணு ஆயு­தங்­களைப் பெற்றுக்கொள்ளும், 2341 ஆம் ஆண்­டுக்குள் உலகம் உயிர் வாழ்க்­கை­க்கு உகந்­த­தற்ற கோளாக மாறும் எனவும்  பாபா வக்னா எதிர்­வு­ கூ­றி­யுள்ளார்.

அதே­ச­மயம் பாபா வக்­னாவால் கூறப்­பட்ட எதிர்­வு­ கூ­றல்­க­ளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும் அவை ரஷ்ய சமூக வலைத்­த­ளங்கள் மூலம் பரப்­பப்­பட்ட வதந்­தி­க­ளாக இருக்­கலாம் என நிபு­ணர்கள்  தெரி­விக்­கின்­றனர்.

அமெ­ரிக்­காவின் இறுதி ஜனா­தி­ப­தி­யாக  பராக் ஒபாமா இருப்பார் என்ற பாபா வக்­னாவின் எதிர்­வு­கூ­றலை 2017 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம்  டொனால்ட் ட்ரம்ப்  ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்று பொய்­யாக்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.