சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

195 0

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ எல்பட கீழ் பிரிவு தோட்ட பகுதியில் இருந்து காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கெசல்முவ ஓயாவின் கிளை ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 7 சந்தேக நபர்களை ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (26) விடியற் காலை 3 மணி அளவில் இந்த கைது இடம்பெற்றதாக ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் இதனை தெரிவித்தனர்.

ஹட்டன் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றதுடன் மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் மீட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் பலாங்கொட மற்றும் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த பகுதியில் பாரியளவில் இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கபடுகிறது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.