கிளிநொச்சியில் இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

274 0

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளரும் கிளிநொச்சி முருகானந்த கல்லூரி பளைய மாணவனுமான ரவிச்சந்திரன் ரிதுசன் என்ற 24 வயதான இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் இன்று இரண்டு மணியளவில் வீட்டாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காலையில் வீட்டங்கத்தவர்கள் வேலைகளுக்காக வெளியில் சென்று இரண்டு மணியளவில் வீடு திரும்பிய போதே முரசுமோட்டை இரண்டாம் கட்டை பகுதியில் உள்ள வீட்டில் தொங்கிய நிலையில் வீட்டாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்