உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்தில் கேரளக் கஞ்சாவுடன் நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடப்பு பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 25 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பற்றுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 44 வயதுடைய கொத்தான்தீவு பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

