கொழும்பில் ஒன்று சேரும் குப்பைகளை கொட்டுவதற்காக கெரவலபிட்டிய குப்பை சேகரிப்பு நிலையத்திற்கு புதிய இடப்பரப்பு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக கொழும் மாநகர சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் கொழும்பின் குப்பைகளை அருவக்காடு குப்பை சேகரிப்பு நிலையத்திற்கு அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எமது செய்திப்பிரிவிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.