இலங்கையின் விவசாய துறையை நவீன மயப்படுத்த உலக வங்கி ஒப்புதல்

435 0

w bஇலங்கையின் விவசாய துறையை நவீன மயப்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்தி சம்மேளனத்திடம் இருந்து 12 கோடியே 50 லட்சம் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு, உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த திட்டம் ஆரம்ப கைத்தொழில் அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் ஐந்து மாகாண சபைகள் இணைந்த வகையில் முன்னெடுக்கப்படவுள்ளன.
வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த புதிய விவசாய நவீனமய திட்டத்தின் கீழ் புதிய பல தொழில்களை உருவாக்க முடியும் என உலக வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a comment