இந்திய கடலோர காவற்படையினர் பாதுகாப்புகள் அதிகரிப்பு

303 0

tamilnadu_cost_guard-636x330தமிழகத்துக்கும், மன்னார் வளைகுடாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் இந்திய கடலோர காவற்படையினர் பாதுகாப்புகளை அதிகரித்துள்ளனர். த ஹிந்து நாளிதழ் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த பகுதி ஊடாக தங்கம் மற்றும் போதைப் பொருட்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடத்தப்படுகின்றன. அண்மைக்காலமாக பாரிய அளவான போதைப் பொருட்களும், தங்கமும் கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையிலேயே இந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.