தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு, வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இன்று அதிக அளவில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதால், உரிய ஏற்பாடுகளை செய்ய மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 9,624 கிராம ஊராட்சிமன்றத் தலைவர் பதவிகள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மொத்தம் 2 கோடியே 58 லட்சத்து 70,941 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

