இலங்­கை­ ­பா­து­காப்பு செய­லா­ள­ருக்கு எதி­ராக 100 பக்க மனித உரிமை மீறல் குற்ற அறிக்கை

321 0

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான புதிய அர­சாங்­கத்தின் பாது­காப்புச் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள மேஜர் ஜெனரல் கமால் குண­ரத்ன போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருக்­கிறார் என்­ப­தற்கு வலு­வான ஆதா­ரங்கள் இருப்­ப­தாகக் குறிப்­பிட்­டி­ருக்­கின்ற தென்­னா­பி­ரிக்­காவைத் தள­மாகக் கொண்­டி­யங்கும் சர்­வ­தேச உண்­மைக்கும் நீதிக்­கு­மான செயற்றிட்டம், அவர்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றங்­களைப் பட்­டி­ய­லிட்டு அறிக்­கை­யொன்­றையும் வெளியிட்­டி­ருக்­கின்­றது.

இறு­திக் ­கட்­டப்­போரின் போது இடம்­பெ­யர்ந்­த­வர்கள் மீதான தகு­தி­வாய்ந்த அதி­கா­ர­மு­டைய 53 ஆவது படைப்­பி­ரிவின் கட்­ட­ ளைத்­த­ள­ப­தி­யா­கவும், சித்­தி­ர­வ­தைகள் நடத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்ற ஜோசப் இரா­ணுவ முகாமின் கட்­டளை அதி­கா­ரி­யா­கவும் தற்­போ­தைய பாது­காப்புச் செய­லா­ளரின் பங்­க­ளிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி அவர் பற்­றிய 100 பக்க அறிக்கை வெளி­யி­டப்­பட்­டி­ருப்­ப­தாக சர்­வ­தேச உண்­மைக்கும், நீதித்­துக்­கு­மான செயற்­றிட்டம் கூறி­யி­ருக்­கி­றது.

தமது அறிக்கை தொடர்பில் கருத்து வெளி­ யிட்­டுள்ள அச்­செ­யற்­றிட்­டத்தின் நிறை­வே ற்றுப் பணிப்­பாளர் யஸ்மின் சூக்கா, ‘தற்­போ­தைய இரா­ணு­வத்­த­ள­பதி சவேந்­திர சில்­வா­விற்கு எதி­ராக இருப்­பதைப் போன்று, கமால் குண­ரத்­ன­விற்கு எதி­ரா­கவும் ஆரம்­பத்­தி­லி­ருந்தே வலு­வான வழக்­குகள் இருந்­து­வ­ரு­கின்­றன.

முக்­கிய பத­வி­க­ளுக்கு குற்­றஞ்­சு­மத்­தப்­பட்­டி­ருக்கும் போர்க்­குற்­ற­வா­ளி­களை நிய­மிப்­பதன் ஊடாக இலங்கை அர­சாங்கம் உள்­நோக்­கத்­துடன் தண்­ட­னை­க­ளி­லி­ருந்து பாது­காப்பு வழங்­கப்­ப­டு­வதை ஊக்­கு­வித்து வரு­கின்­றது’ என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின் றார்.

மேலும் போரின் போது கமால் குண­ரத்­ன­வினால் தலைமை தாங்­கப்­பட்ட படைப்­பி­ரிவு புதுக்­கு­டி­யி­ருப்பு, புது­மாத்­தளன் மற் றும் முள்­ளி­வாய்க்கால் ஆகிய பகு­திகள் மீதான தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­டி­ருந்­த­தா­கவும், அப்­ப­டைகள் பொது­மக்கள் வைத்­தி­ய­சா­லைகள், தற்­கா­லிக வைத்­தி­ய­சா­லைகள் மற்றும் உணவு விநி­யோ­கிக்கும் இடங்கள் போன்­ற­வற்றின் மீது தொடர்ச்­சி­யாக நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­டி­ருந்­த­தா­கவும், அதன் விளை­வாக ஆயி­ரக்­க­ணக்­கான உயி­ரி­ழப்­புக்­களும், சொத்­த­ழி­வு­களும் ஏற்­பட்­ட­தா­கவும் சர்­வ­தேச உண்­மைக்கும், நீதிக்­கு­மான செயற்­றிட்டம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

‘மேஜர் ஜெனரல் கமால் குண­ரத்ன பாது­காப்புச் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டமை­ யா­னது சர்­வ­தேச சட்ட மற்றும் மனித உரிமை நிய­மங்­களைப் பின்­பற்­று­வதை நோக்­க­மாகக் கொண்­டுள்ள நாடு­க­ளுக்கு ஒரு பாரிய நெறி­மு­றை­யி­லான சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. புதி­தாகத் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தி­யான கோத்தபாய ராஜபக் ஷவினால் மேற்கொள்ளப்பட்ட நியமனங் களைப் பார்க்கும் போது ஜனாதிபதியும், அவருடைய புதிய ஆட்சியின் சில உறுப் பினர்களையும் ஒன்றுசேர்ந்த குற்றவியல் அமைப்பு என்று நினைக்காமல் இருக்க முடியாது.

என்றேனுமொரு நாள் அவர்களது தண்ட னையிலிருந்து பாதுகாப்பு முடிவடையும் போது அவர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்’ என்றும் யஸ்மின் சூக்கா தெரிவித்திருக்கிறார்.